காதலிக்காக காதலன் கண்ணீர் விடும் காட்சியின் ஒரு புதிய கதை.

Love story. Part-1


ஆணும் பெண்ணும் இப்படித்தான் காதலிக்கிறார்களா?எப்படியெல்லாம் காதலனும், காதலியும், பண்ணுறாங்க நீங்களே பாருங்க.

ஒரு ஊரில்  அப்பா,  அம்மா , தாத்தா, பாட்டி அனைவரும்  வாழ்ந்து வந்தனர். அந்த இளமை தம்பதிக்கு ஆண்,  பெண் என இரு குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளளின் சிறுமை பருவத்திலேயே தந்தை  சில நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விட்டார்.பிறகு  அந்த துக்கம்  தாங்க முடியாமல்  மனைவியும்  தலையில் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி கொண்டு தானே தன்மேல்  தீயை பற்ற வைத்துக்கொள்கிறாள். சிறிது நேரத்தில்  அக்கம் பக்கத்தில்  உள்ளவர்களெல்லாம் ஓடிவந்து  அவள் மேல்  பற்றி எரிய கூடிய நெருப்பை அணைக்க முற்ப்படுகின்றர். அதற்குள் தீ  அதிவேகத்தில்  உடம்பு  முழுவதும்    உயிர் பிழைக்கக்கூடிய நிலையில்லாத அளவுக்கு  காயங்கள் எற்ப்பட்டவுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி செய்கிறார்கள். அங்கே  மருத்துவ பலனின்றி  இறந்து விடுகிறாள். பிறகு அந்தகுழந்தைகளின் பள்ளிப்பருவத்தின் காலம் தாத்தா  , பாட்டி யின் உதவியால் கல்வியை  கடக்கின்றனர். தாய் தந்தையை சிறுமையிலேயே இந்ததால் மிகவும் செல்லமாக வளர்க்கிறார்கள்.  அவர்கள்  என்னென்ன கேட்கிறார்களோ உதாரணத்துக்கு  சட்டை, துணிமணி,  சைக்கிள், ஸ்கூட்டி, பள்ளிக்கு தேவைப் படும்  நோட்டு, புத்தகம்,  பேனா, பென்சில்,  ஜாமன்றிபாக்ஸ், இரப்புணி, ஸ்கூல்பேக், ஷீ, சாக்ஸ், சோப்பு,  சீப்பு,  கண்ணாடி,  பவுடர், உடற்பயிர்சி செய்ய ஜிம்  பொருட்கள் என்பது போன்ற அனைத்து  வகையான பொருள்களையும் வாங்கித் தருகின்றனர்.
 பள்ளிக்கூடம்  போகும் காலத்தில்  ஆசிரியர்  ஒரு நாள் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அந்த மாணவி  பாடத்தை கவனிக்காமல் தூங்கி விழ வாத்தியார் மாணவியை பார்த்து  பாப்பா எழுந்து மேஜைமேலே  கையை கட்டிக்கொண்டு ஏறி நில் என்று சொன்னார் .அப்போது எல்லாரும் அந்தப்பெண்ணை ஏலனமாக பார்த்து சிரித்த வகையில்  இருந்தனர். அந்த நேரத்தில்  அவள் திரும்பிப் பார்க்கும் போது அதில் ஒரே ஒரு பையன்  மட்டும்  மிகவும் சோகமாக ஆசிரியர் இப்படி பட்ட தண்டனையை கொடுத்து விட்டாரே என நினைத்து அப்பெண்ணை நோக்கினான். உடனே  கண்களில் கண்ணீர்  வரக் காட்சியையும் கண்டாள். பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்தவுடன் அவன் முன்னே சென்றான்....நன்றி.தொடரும்.....

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்